காய்கறி பிரியாணி செய்வது எப்படி

காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

 காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

காய்கறி பிரியாணி, இந்தியாவில மட்டும் இல்ல, உலகெங்கும் சுவைக்கு பெயர் பெற்ற ஒரு சிறப்பு உணவா இருக்கு.  உணவுகளில இதுக்குன்னு ஒரு தனி இடம் உண்டு. பல்வேறு காய்கறிகள், மசாலா பொருட்கள் அப்புறம் நறுமணம் தரும் மூலப்பொருட்கள வெச்சு தயாரிக்கும் இந்த பிரியாணி, எல்லாராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு. இது சுவை மட்டுமல்ல, சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாவும் இருக்கு. இந்த வலைப்பதிவுல  காய்கறி பிரியாணி செய்வது எப்படி அப்படீன்னு பாக்கலாம் வாங்க.

காய்கறி பிரியாணியின் சுவை மற்றும் ஆரோக்கியம்

காய்கறி பிரியாணி உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்கக்கூடிய உணவாகும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு உணவா மாற்றுது. இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள், நெய், கொத்தமல்லி, புதினா போன்றவை நறுமணம் தருவதோட மட்டுமல்லாம, செரிமானத்த எளிதாக்கவும் உதவுது.  உணவா இருந்தாலும், பிரியாணி அப்டீனாலே அது சுவை அப்புறம் நன்மைகள் நிறைந்ததாவே இருக்கும்.

 காய்கறி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

– பாஸ்மதி அரிசி – 2 கப்

– வெங்காயம் – 2

– தக்காளி – 2

– கேரட் – 2

– பீன்ஸ் – 8-10

– காலிஃப்ளவர் – ¼ கப்

– உருளைக்கிழங்கு – 1

– பச்சை பட்டாணி – ¼ கப்

– தயிர் – ¼ கப்

– பச்சை மிளகாய் – 2

– பூண்டு பல் – 3

– இஞ்சி – 1 துண்டு

மஞ்சள் தூள் – ½ மேஜைக்கரண்டி

– கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி

– மல்லி தூள் – 2 மேஜைக்கரண்டி

பிரியாணி இலை – 2

பட்டை – 1 துண்டு

– ஏலக்காய் – 3

– கிராம்பு – 3

– நட்சத்திர பூ – 1

மிளகாய் தூள் – சுவைக்கேற்ப

நெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

– கொத்தமல்லி – சிறிதளவு

– புதினா – சிறிதளவு

நீங்கள் இந்த அனைத்து பொருட்களையும் உயிர் இயற்கை உழவர் சந்தையில இருந்து வாங்கலாம். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாம அவை இயற்கை முறையில வளர்க்கப்படுகின்றன. ஆரோக்கியமாக வாழ உயிர் பொருட்கள தேர்ந்தெடுங்க.

காய்கறி பிரியாணி செய்முறை

1. முதலில பாஸ்மதி அரிசிய நல்லா கழுவி சுமார் 45 நிமிடங்கள் ஊறவெச்சுக்கோங்க. வெங்காயம், தக்காளி, காய்கறிகள் அப்புறம் இஞ்சி, பூண்ட நறுக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் தயார் செஞ்சுக்கணும்.

2. குக்கரில 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை போன்ற மசாலா பொருட்கள நன்றா வதக்கிக்கோங்க. இதனால பிரியாணிக்கே தனி நறுமணம் வரும்.

3. வெங்காயத்த சேர்த்து, அது கண்ணாடி போல மாறும் வரை வதக்கிக்கோங்க. பின்னர் அரைச்சு வெச்ச இஞ்சி-பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறணும்.

4. மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா அப்புறம் மிளகாய் தூள சேர்த்து நன்றா கிளறி, தக்காளிய சேர்த்து 2 நிமிடம் வேகவிடனும். பிறகு உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வேக விடுங்க.

5. காய்கறிகள் நன்றா வெந்ததும், கால் கப் தயிர சேர்த்து நல்லா கிளறி, அப்புறம் அரிசி சேர்த்து பக்குவமா கிளறிக்கனும். தேவையான அளவு தண்ணீர சேர்த்து, கொத்தமல்லி, புதினா, உப்பு ஆகியவற்ற தேவையான அளவுக்கு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக வெச்சுக்கோங்க.

6. ஒரு விசில் வந்ததும், குக்கர 15-20 நிமிடம் அப்படியே வெச்சுக்கணும். பின்னர் மூடிய திறந்து,  காய்கறி பிரியாணிய தட்டுல எடுத்து பரிமாறி உண்ணுங்க

பிரியாணியின் வரலாறு

பிரியாணி அப்படீனாலே இந்தியர்கள் மட்டுமல்லாம, உலகம் முழுவதும் உணவுப் பிரியர்களின் மனத கொள்ளை கொள்ளும் ஒரு உணவா,  விளங்குது. இது பாரசீகர்கள் மூலம் இந்தியாவிற்கு அறிமுகமாகி, மொகுலாயர் காலத்தில இந்திய சமையல் கலையின் அடையாளமா இப்போ உயர்ந்து இருக்கு. பிரியாணி அப்படீங்குற சொல் ‘பிரியான்’ என்ற பாரசீயச் சொல்லில இருந்து வந்தது. இதன் பொருள் ‘வறுத்தது’ அல்லது ‘அவித்தது’.

முகலாயர்கள் இந்த சமையல் முறைய இந்தியாவின் வடபகுதியில கொண்டு வந்தப்போ, இது தெற்குளையும் வேகமா பரவுச்சு. தமிழ் நாட்டு அரசு மரபுகளிலும், தஞ்சாவூர் மராட்டியர்களின் ஆட்சியிலும், பிரியாணி தனித்துவமிக்க சுவையோட வேரூன்றுச்சு. பலவிதமான மசாலா பொருட்கள், சுவையான நெய் அப்புறம் அரிசி சேர்ந்த இந்த உணவு, விருந்துகளில முக்கிய இடத்த பிடிக்குது.

இந்நாளில, பிரியாணி சைவ மற்றும் அசைவ வடிவங்களில கிடைக்குது. அதில  காய்கறி பிரியாணி, காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான  உணவா பிரபலமடைஞ்சிருக்கு.

அசைவ உணவுகள் உடலுக்கு பல சத்துக்கள வழங்கினாலும்,  காய்கறி பிரியாணி பல்வேறு காய்கறிகள சேர்த்துச் செய்வதால இது மிகவும் ஆரோக்கியமான, உடல் நலனுக்கு சிறந்ததா அமையுது. பண்டிகை நாட்களில, விருந்துகளில, குடும்ப நிகழ்ச்சிகளில,  காய்கறி பிரியாணி ஒரு முக்கியமான இடத்த பிடிச்சுருக்கு. இத செய்யும் போது அதற்கான சுவையும் நறுமணமும் நிச்சயமா அனைவரின் மனத்தையும் கவரும்.

முடிவுரை

காய்கறி பிரியாணி அப்படீங்குறது சுவையும் ஆரோக்கியமும் ஒருங்கிணைக்கும் ஒரு சிறந்த உணவு.  உணவுப் பிரியர்களுக்கு இது மிக அருமையான விருப்பமான உணவாக இருக்கலாம். அடுத்து நீங்க  காய்கறி பிரியாணிய மேல பார்த்த படி செஞ்சு, உங்க குடும்பத்தினருடன் மகிழ்ந்து உணவருந்துங்க! 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *