No products in the cart.
Show:
Showing all 10 results
ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!. மிச்சிகன் பல்கலைக்கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
உணவுப்பொருட்களில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை சேர்க்கப்படுகிறது .பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பக்டீரியாவை தாக்கி அழிக்கிறது.இந்த பக்டீரியாக்கள் மூளையில் உள்ள நியூரான்களை அதிக அளவிலும் விரைவிலும் அழிக்கும் திறன் கொண்டவை. இவற்றை கட்டுப்படுத்தி அழிப்பதால் நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும்.குடல் நோய் மற்றும் அதன் மூலம் வரும் எரிச்சல்களை பட்டையின் மருத்துவ குணம் கட்டுப்படுத்துகிறது. மற்றும் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை இரைப்பை குடலில் தங்கும் நச்சுப் பூச்சிகளை அழித்து இரைப்பை குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது.இலவங்கப் பட்டையில் நுண்ணுயிர் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உள்ளது. அதனால் இது ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன் தருகிறது. உங்களது சமையல் அறைத்திட்டு அல்லது வீட்டு தரைகளை துடைக்கும் போது நீரில் சில துளிகள் இலவங்கப் பட்டை எண்ணெய்யை கலந்து துடைத்தால் நல்ல பயனளிக்கும்.
கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.சிறிது இந்து உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். சமையலுக்கு வாசனை பொருளாகவும் பயன்படுகிறது
மருத்துவகுணம் கொண்ட இயற்கை ஏலக்காய்