No products in the cart.
Show:
Showing 1–16 of 17 results
உடலுக்கு அதிக வலிமையை கொடுக்கும் குதிரைவாலி அரிசி
அதிக குளிர்ச்சி தரும் கம்பு குருணையை கொண்டு கம்பு சாதம் செய்து மோருடன் சேர்த்து சாப்பிடலாம்.
அரிசி வகைகளில் வைட்டமின் ஈ சிவப்பரிசியில் மட்டுமே உண்டு. இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற அவல் இதுதான்.
பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். மாப்பிள்ளை சம்பா ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். உடலுக்கு அதிக பலம் தரக்கூடியது மாப்பிள்ளை சம்பா அவுல்
வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. கால்சியம் கூடுதலாக உள்ளது.
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
தமிழகத்தில் தினைக்கு என்று தனி மதிப்பு உண்டு. தினையரிசி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும். பாயசம் மிக சுவையாக இருக்கும். இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது
சாமை சிறுதானிய வகையை சேர்ந்தது. சாமையில் உப்புமா, இட்லி, பொங்கல், தோசை, கிச்சடி போன்ற அனைத்தும் சமைத்து உண்ணலாம் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது.
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகிபக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை நமக்கு பரிச்சயம். கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப்பெறும் . நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது . உடல் சூட்டை தணிக்கும்.