No products in the cart.
Show:
Showing all 16 results
Special Green Tea 100g / பசுந்தேயிலை டீ
Rated 2.50 out of 5
2 Ratings
₹173.00 Add to cart
Weight Based Shipping
உடலுக்கு அதிக வலிமையை கொடுக்கும் குதிரைவாலி அரிசி
அதிக குளிர்ச்சி தரும் கம்பு குருணையை கொண்டு கம்பு சாதம் செய்து மோருடன் சேர்த்து சாப்பிடலாம்.
காபி என்ற சொல்லை உச்சரித்தாலே சிலரின் முகம் மலர்ந்து விடும். காபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை காபி மேம்படுத்தும். அளவாக தான் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
தமிழகத்தில் தினைக்கு என்று தனி மதிப்பு உண்டு. தினையரிசி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும். பாயசம் மிக சுவையாக இருக்கும். இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது
சாமை சிறுதானிய வகையை சேர்ந்தது. சாமையில் உப்புமா, இட்லி, பொங்கல், தோசை, கிச்சடி போன்ற அனைத்தும் சமைத்து உண்ணலாம் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது.
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகிபக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை நமக்கு பரிச்சயம். கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப்பெறும் . நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது . உடல் சூட்டை தணிக்கும்.
கம்பு உடலுக்கு அதிக பலத்தை கொடுக்கும். கால்சியம், மக்னீசியம், அயன் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சாதம் போல் சமைத்து உண்ணலாம். மாவாக அரைத்து காஞ்சி வைத்து அருந்தலாம். குருணையாக செய்து வேகவைத்து மோருடன் கலந்து கூழாக செய்து சாப்பிடலாம்.