Subtotal: ₹1,260.00
Show:
Showing 17–32 of 41 results
ஆளி விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள். ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது. ஆளி விதையில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. டயட்டில் இருப்பவர்கள், உடல் கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பயன் அடையலாம்.
இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட நரிபயிரில் அதிக அளவில் புரதசத்து,நார்ச்சத்து ,மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசியச் சத்துக்களும் அடங்கியுள்ளது . இது ஆங்கிலத்தில் Black Eye Beans என்று அழைக்கப்படுகிறது .நரிப்பயறை முளைகட்டி பச்சையாக சாப்பிடுவது சர்க்கரை நோயை கட்டுக்குக்குள் கொண்டுவர உதவுகிறது
Urad Dal White (For Fry) / உளுத்தம்பருப்பு தாளிப்பு 100g
₹20.00 Add to cart
Weight Based Shipping
Only 5 left in stock
உளுத்தம் பருப்பில் என்னற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது. உளுத்தம் பருப்பு சட்னி ஒரு பாரம்பரிய உணவுப்பொருள். இன்னும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்து சாப்பிடப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும் .உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்
வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிட, சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும்ப, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இருக்கின்றன. இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.மன அழுத்தம்,
ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது.சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.
இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.
ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது
Cowpea dhal /Flattened lentils 500g / தட்டை பருப்பு
₹77.00 Add to cart
Weight Based Shipping
Only 1 left in stock
தட்டை பயறுகளில் புரதசத்து மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது .இதனால் தான் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்துள்ளது.இரத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இருதய சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறனை கொண்டுள்ளது கருப்பு கண்களை கொண்ட தட்டை பயறு. தட்டை பயறுகளில் ஃப்ளேவோனாய்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள், கரையா நார்ச்சத்து (லிக்னின் என்ற ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்) போன்றவைகள் இருப்பதால், இதயத்திற்கு உகந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.மற்ற பயறு வகையில் உள்ளதை விட தட்டை பயறுகளில் உள்ள க்ளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாகவே உள்ளது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகள் மிகவும் நல்லது. அதற்கு காரணம், இவ்வகை உணவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயல்பு வீதத்தில் வைத்திருக்க உதவும்.
Green Gram Broken 500g / பச்சை பயிறு உடைத்தது
₹110.00 Add to cart
Weight Based Shipping
Only 7 left in stock
இயற்கைமுறையில் விளைவிக்கப்படும் பச்சைபயிரில் நார்சத்து ,புரதசத்து ,இரும்புசத்து நிறைந்தது . உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு ,கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது .வெயிலில் அதிகமா வேலைசெய்வோர் வாரம் இருமுறை உணவில் பச்சைப்பயிறு சேர்த்துவந்தால் சரும நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கொள்ளில் மிக அதிகமான புரதசத்து உள்ளது .மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதிலும் ,உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை கரைப்பதிலும் கொள்ளு முக்கிய இடம் பெறுகிறது . இதில் உள்ள நார்சத்து,கால்சியம் ,பாஸ்பரஸ் ,அமினோ அமிலங்கள் வளரும் குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவாகும் .
பருப்பு அதிகளவு புரதத்தையும் அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால்ஒரு முக்கிய உணவாகும்.கடலைபருப்பு பொதுவாக சமையலில்தாளிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற சிற்றுண்டியான வடை செய்யவும் ,இனிப்பு உருண்டைசெய்யவும் பயன்படுகிறது.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும். உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.
அதிக புரதத்தை கொண்டுள்ளது. முளைப்பு கட்டிய சுண்டல் அதிக சக்தி வாய்ந்தது. தினசரி உணவில் பயன்படுத்தலாம்
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம். சீரகம், சோம்பு , வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி நாம் அன்றாட குடிநீரையே மருத்துவ குடிநீராக மாற்றலாம்.