வரலாற்றில் ஒரு பார்வை வாழைப்பழம் முதல்ல இப்போ இருக்கற மாதிரி பெருசு பெருசாலாம் இருக்காது. ஒரு விரல் நீளம்தா இருக்கும். அரேபிய மொழியில “பனானா’ அப்படீன்னா விரல்னு அர்த்தம். அதனால அரேபியர்கள் வாழைப்பழத்த ‘பனானானு’ பெயரிட்டு அழைச்சாங்க. அப்புறம் நாள் போக போக ஆங்கிலத்துலையும் இந்த பெயர பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ உலகம் முழுக்க “பனானா’ அப்படீனே அழைக்கப்படுது. இந்த வலைப்பதிவுல வாழையின் நன்மைகள் பற்றி பாக்கலாம் வாங்க. முதல் முதல்ல வாழைப்பழம் ஆசியாவிலதான் தோன்றுச்சு. வாழை
Category: Tamil blogs
இத நாம தமிழுல ‘தனியா’ அப்படீனும் அழைப்போம். பொதுவா இதனோட இலைகள் அப்புறம் காய்ந்த விதைகள் தான் உணவுகளில சமைக்க பயன்படுத்தப்படுது. இது ஒரு பழமையான மூலிகை. கி.மு 5000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுது. கொத்தமல்லி இலைகள சேர்க்காம பல பேருக்கு சமையலே முடிவடையாது. அப்படிப்பட்ட கொத்தமல்லியின் நன்மைகள் என்ன என்ன அப்படீன்னு இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க. வரலாற்றில் ஒரு பார்வை இந்த மூலிகை செடி தோன்றியது இத்தாலியில தான். கொத்தமல்லி பல நூற்றாண்டுகளா தமிழ்
மூங்கில் அரிசி நன்மைகள் பத்தி இந்த வலை பதிவுல பாக்கலாம் வாங்க. வாழையடி வாழையா வாழ்க. மூங்கில் போல சுற்றம் தளராமல் வாழ்க’ அப்படீன்னு மணமக்கள வாழ்த்தும் பழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருக்கு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டுமே ஒன்னோட ஒன்னு புதர் போல நெருங்கி வளரக்கூடியது. அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுறதும், வாழை மரம் கட்டுறதும் தவறாமல் இடம் பெறுது. அப்படி நம் வாழ்க்கையில ஒன்றியிருக்குற பயிர்களில ஒன்றான
மாதுளை பழம் (pomegranate) சிறுமர இனத்த சோ்ந்த பழ மரம். நவீன ஈரான சேர்ந்தது மாதுளை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய வரலாற்ற கொண்டது. மாதுளையின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க. பண்டைய பாபிலோன், பெர்சியா அப்புறம் எகிப்து நாடுகளில பயிரிடப்பட்டிருக்கு. இது 5000 ஆண்டுகளா ஈரான்லயும், ஆப்கானிஸ்தான்லயும், பலுகிஸ்தான்லயும் பயிரிடப்பட்டு வருது. இந்தியாவில, குறிப்பாக தமிழ்நாட்டில, மாதுளைகள் புனிதம், கருவுறுதல் அப்புறம் செழிப்பு ஆகியவற்றோட ஒப்பிடப்படுது, அதனால மத நிகழ்வுகள் அப்புறம் கலாச்சார
உம்பளச்சேரி பசு
வரலாற்றில் ஒரு பார்வை நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்க, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்த சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியோட பெயர கொண்டு இந்த வகை மாடுகள் உம்பளச்சேரி மாடுகள் அப்படீன்னு அழைக்கப்படுது. நாகை, திருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில இருக்க உப்பன் அருகு அப்படீன்னு அழைக்கப்படுற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகள மேய்ந்து இனவிருத்தி செய்ததால உப்பளச்சேரி மருவி உம்பளச்சேரி அப்படீன்னு பெயர் பெற்றது. இந்த இனம் காங்கயம் காளை போன்ற குணங்கள கொண்டிருக்கு. மேலும், திருவாரூர் டெல்டா
ராஜமுடி அரிசி
வரலாற்றில் ஒரு பார்வை ராஜமுடி அரிசி தன்னோட பெயரிலயே கம்பீரமா இருக்கறதோட மட்டும் இல்லாம மன்னர்கள் காலத்துல இருந்தே பயன்படுத்தப்பட்டுட்டு வர்ற பழைய பாரம்பரிய அரிசி. ஒரு காலத்துல மகாராஜாக்களுக்கு ரொம்ப பிடிச்ச உணவு. அரச சமையலறைகள்ல அதிகமா விரும்பப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஒரு உணவும் கூட. ராஜமுடி அரிசி கேரளாவோட பாலக்காடு மாவட்டத்துல இருந்து வந்தது. “ராஜமுடி” அப்படீங்குற பெயர் “ராஜாக்களின் கிரீடம்” அப்படீன்னு பொருள்தரும். மேலும், இந்த அரிசி வகை பழைய திருவிதாங்கூர் ராஜ்யத்த சேர்ந்த
திராட்சைப்பழம்
வரலாற்றில் ஒரு பார்வை காட்டு திராட்சை இக்காலத்துல இருக்க துருக்கி, ஜோர்ஜியா அப்புறம் ஈரான் நாட்டுல தோன்றியதா நம்பப்படுது. இந்த காட்டு வகைகள் தான் தற்காலத்துல நாம அறிந்த திராட்சைகளுக்கு மூதாதையர்கள்னு சொல்லலாம். இந்த வலை பதிவுல நாம திராட்சையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. எகிப்தியர்கள், ஃபீனீசியர்கள், கிரேக்கர்கள் அப்புறம் ரோமானியர்கள் போன்ற பண்டைய நாகரிகங்களில பழத்திற்காகவும், ஒயின் தயாரிப்பிற்காகவும் திராட்சை பயிரிடப்பட்டுச்சு. திராட்சை மொராக்கோ, வடக்கு போர்ச்சுகல், தெற்கு ஜெர்மனி, வட ஈரான், மத்திய
புதினா (Puthina – Mint leaves)
புதினா (மெந்தா), வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட மூலிகைச் செடி. தமிழ்நாட்டோட சமையல் அப்புறம் இயற்கை மருத்துவ முறையில முக்கிய பங்கு வகிக்குது. தமிழகத்துல இத ஒரு மருத்துவ மூலிகை செடியா பல்லாண்டு காலமா பயன்படுத்திட்டு வர்ராங்க. தமிழ்நாட்டில புதினா பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி இருந்து, பாரம்பரிய மருத்துவம் அப்புறம் சமையல் நடைமுறைகள்ல பயன்படுத்த பட்டுட்டு வருது. இந்த மூலிகை செடியோட குளிரூட்டும் பண்பு வெப்பமண்டல காலநிலையில மிக உபயோகமா இருக்கு. வரலாற்றில் ஒரு பார்வை
பர்மா கருப்புகவுனி அரிசி (Burma Black Rice)
வரலாற்றில் ஒரு பார்வை கருப்புகவுனி அரிசி (Burma Black Rice) பண்டைய சீனாவ பூர்விகமா கொண்டது. பண்டைய சீன மன்னர்கள், அரச குடும்பத்த சேர்ந்தவங்க, மந்திரிகள், அப்புறம் பெரிய வியாபாரிகள் மட்டும் பயன்படுத்திட்டு வந்துருக்காங்க. பண்டைய தமிழ் மன்னர்கள் சீன மன்னர்களோட வைத்திருந்த கப்பல் போக்குவரத்து அப்புறம் வியாபாரம் காரணமா இந்த கருப்பு கவுனி அரிசி தமிழகம் வந்தடைந்தது. கருப்புகவுனி இதனால தமிழ்நாட்டோட பாரம்பரிய அரிசி வகைகள்ல ஒன்னா இருக்கு. சீன அரசர்கள் அவுங்களோட நாட்டுக்கு வர்ற
அசில் கோழிகள்
தமிழ்நாட்டோட விவசாய நிலப்பரப்புல, ஒரு நாட்டுக் கோழி இனம் அதனோட குறிப்பிடத்தக்க வலிமை அப்புறம் தனித்துவமான பண்புக்காக பெயர் பெற்றது அப்படினா அது அசில் கோழிகள் தான். அசில் கோழி ஆந்திரா அப்புறம் தமிழ்நாட்டோட மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்த தாயகமாக கொண்டிருக்கு. “நாட்டு கோழி” அப்படீங்குற சொல் பல்வேறு உள்ளூர் கோழி இனங்கள உள்ளடக்கி சொல்லப்படுது. இது தமிழ்நாட்டில உள்ள உள்நாட்டு கோழிகளோட பொதுவான வகைய குறிப்பிடுது. தமிழ்நாட்டுல கோழி இனங்கள் நல்ல செழுமையான பன்முகத்தன்மைய
Recent Posts
- Unlocking the Powerhouse – Different Ways Moringa Powder Can Boost Your Health
- கன்னிஆடு (Kanni Goats)
- Unlock the Secret to Healthier Eating – Discover the Benefits of Millet Chapati Mix
- கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் (Parrot Beak Aseel Chickens)
- Discover the Delicious World of Mappillai Samba Cookies